தீண்டாக்கல் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா, கூடலூர் பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் 55கிமீ துரத்தில் கூடலுர் எனும் ஊருக்கு கிழக்கே அருகே 4கிமீ தூரத்தில் தீண்டாக்கல் மலைக்கோவில் அமைந்துள்ளது.
திண்டுக்கல்லி்ல் .இருந்து வருபவர்கள் வெள்ளப்பாறை எனும் இடத்தில் இருந்தே நேரடியாக வந்து விடலாம், கரூரில் இருந்து வருபவர்கள் கூடலூர் வந்து கிழக்கே வரவேண்டும். மலைக்கோவில் அடிவாரம் வரைக்கும் பைக், கார், பஸ்ஸில் வரலாம்.
Google Map Location : https://goo.gl/maps/jG3xHCaBdQfHBK19A
இம்மலைக்கோவில்
அமைந்திருக்கும் ஊரின் வடமேற்கே கொங்கு நாடு உள்ளிட்ட சேர நாடும், கிழக்கே சோழ
நாடு, பாண்டிய நாடு ஆகிய மூன்று பெரும் பேரரசர்களும் சந்திக்கும் வரலாற்றுச்சிறப்பு
மிக்க மையத்திலே ஊராக இருந்ததால் கூடலுர் என பெயர் இருந்துள்ளது. பாண்டியர்களின் படைவீரர்கள்
தங்குவதற்கும் தங்களின் எல்லைப்பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் பெருவழிப்பாதையின்
இவ்விடத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். இந்தப்பகுதியினை சுற்றிலும் பல சிவாலயங்களையும்
எழுப்பியுள்ளனர்.
பெருவழியாகப்
பயண்படுத்திவந்த இப்பாதையில் தீண்டாக்கல் மலையை பாண்டியர்களின் எல்லை என்பதை
தெரிவிக்கவே தீண்டாக்கல் என பெயர் வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஊரின் கிழக்கே
மதில்கரை என்றழைக்கப்படும் மதுக்கரை எனும் ஊரும் அகலமான கற்சுவரும் காண முடியும்.
பாண்டியர்களின்
எல்லைப் பகுதியில் இதுபோல பல கோவில்கள் எழுப்பியுள்ளனர். தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி
போன்ற இடங்களில் வீரபாண்டீஸ்வரர் என்று பெயர் வைத்ததைப்போல தீண்டாக்கல் மலைமேல்
இருக்கும் சுவாமிக்கு வீராபண்டீஸ்வரர் என்றழைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மலை
அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல படி அமைப்பு வைத்துள்ளனர். சுமார் 15 நிமிட நேரத்தில் நடந்து மேலே போய்விடலாம். மலைக்கு மேலேயிருந்து சுற்றியுள்ள 5கிமீ தொலைவு அனைத்து பகுதிகளையும் எளிதா பார்க்கும்படி அமைந்துள்ளது. மேலே ஒரு கண்காணிப்பு கோபுரம் போல ஒரு இடமும் இருக்கு, இங்கிருந்து
நான்கு பக்கங்களிலும் மிகத் துல்லியமாக பார்க்கும் வகையில் அமைத்துள்னர். இதே போல
அமைப்பு திண்டுக்கல் மலைக் கோட்டையில் உள்ளது.
கோவிலின்
சுவர்கள் கற்களாலும் விமானம் செங்கற்களால் கட்டப்பட்டு இருக்கு விமானம் அறுங்கோன
வடிவத்தில் இருக்கு, இக்கோவில் கட்டும் முன்பே ஒரு மாதிரி வரைபடம் செதுக்கி
வைதிருக்காங்க. இதை கோவிலின் வடமேற்கில் பின்புறமாக கோட்டுப் படங்களாக வரைந்து
வைத்துள்ளனர்.
கோவிலுக்கு வெளியில் விநாயகர் சன்னதி, தெற்கு பார்த்து தட்சிணா மூர்த்தி சுவாமியும் உள்ளனர். கோவிலுக்கு வடக்கு பகுதியில் முருகன் மற்றும் சண்டேஸ்வரர் சன்னதியும் இருக்கு. இந்த பிரகாரத்தில் வேறு வேறு காலங்களில் செய்வித்த கட்டுமானங்களை காண முடிகிறது.
கோவில் தோ்
மலையின்
அடிவாரத்தில் பராமரிப்பின்றி இருக்கும் மிகப்பெரிய தோ் பார்க்க முடியும். தேரில்
அழகிய வேலைப்பாட்டுடன் சிலைகளையும் காணடமுடியும். மிகப்பெரிய தோ் சக்கரங்களும், அச்சுகளும் இக்கோவிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.
நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தேர் அமைக்கப்பட்டு, கோவில்
திருப்பணியும் செய்துள்ளனர். . 1918 ஆம்
ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் சுதந்திரம் அடைந்த பின் 1967 ஆம் ஆண்டும்
விழா எடுத்து தோ் இம்மலையைச் சுற்றி வந்ததாக தெரியவருகிறது. இக்கோயிலுக்கு விழா
நாட்களில் உற்சவர் உலா வரும் வாகனங்கள் மலைக்கு மேற்பக்கத்தில் ஒரு ஓட்டு வீட்டில்
வைத்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் காலப்போக்கில் சேதமடைந்துவிட்டது.
பராமரிப்பு
மற்றும் வழிபாடு குறைந்திருந்த இக்கோவிலை உள்ளுர் இளைஞர்கள், ஊர்ப்பெரியவர்கள்
மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி செய்துள்ளனர். மலைக்கு மேல்வரையிலும்
படிக்கட்டுகள் செதுக்கவும், கைப்பிடி அமைக்கவும் திட்டமிட்டு
செயல்படுத்தி வருகின்றனர். பெளர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
கோவிலின் மேலேயே அன்னதானம் நடைபெறுவது இன்னும் விசேசமான ஒன்று. இக்கோவிலில் சமணர்கள்
படுக்கைகளும் மலையின் வடக்கு பக்கம் காண முடிகிறது.
தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி...
சிவசங்கர்
திண்டுக்கல்