Sunday, June 9, 2024

பண்ருட்டி வேப்ப மரத்தின் அடியில் சிவலிங்கம்

சிவாய நம!! திருச்சிற்றம்பலம் !!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் செம்மேடு எனும் கிராமத்தின் ஊருக்கு மேற்கே 250 மீட்டர் தொலைவில் கெடிலம் நதி கிளைஆற்றினை அடுத்து 4 அடி  அளவுள்ள ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் பல ஆண்டுகளாக வெட்ட வெளியில் இருந்து வந்தது.


இந்நிலையில் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் சிவலிங்கத் திருமேனி ஜேசிபி கொண்டு மீட்கப்பட்டு ஊர் பொதுமக்களுடன் இணைந்து நந்தி மற்றும் பலிபீடம் பீடங்களில் பிரதிட்டை செய்யப்பட்டது. 

திருமுறைகளில் கயிறு சாற்றி அரும்பன்ன வனமுலையம்மை உடனாகிய சொன்னவாறு அறிவார் என திருநாமம் இட்டு சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களிடம் வழிபாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. 

கோரக்கர் வழிபட்ட சிவலிங்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம். மங்கலம்பேட்டை கிராமத்தில்  முன்னொரு காலத்தில் ஒரு சிவலிங்கம் அவ்விடத்தில் வழிபாட்டில் இருந்துள்ளது. கோ...