Wednesday, April 29, 2026

கோரக்கர் வழிபட்ட சிவலிங்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம். மங்கலம்பேட்டை கிராமத்தில்  முன்னொரு காலத்தில் ஒரு சிவலிங்கம் அவ்விடத்தில் வழிபாட்டில் இருந்துள்ளது. கோரக்கர் வழிபட்டதாக சொல்லப்படும் அந்த மூர்த்தியை அவ்வூர் மக்கள் பௌர்ணமி தோறும் வழிபட்டு வந்துள்ளனர். ஆலயமாக எழுப்ப எண்ணி ஒரு சிவலிங்கமும், நந்தி மற்றும் பலிபீடம் செய்து வந்துள்ளனர் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த திருமேனிகளை திருப்பணி செய்ய இயலாமல் அப்படியே வெட்ட வெளியில் வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.



கோவை அரன் பணி அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்ய முன்வந்தது.

அரன் பணியின் அடியார் திரு. மணி அவர்களை முன்னதாக அனுப்பி இடத்தை சுத்தம் செய்து பீடங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது 

கள்ளக்குறிச்சி திரு. வசந்த் ஐயா அவர்கள் அரன் பணி அமைக்கும் மேற்கூரையுடன் சுற்றி அடைக்கும் பணியை செய்து தருவதாக முன்வந்தார். 

18.04.2026 அன்று மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீடங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.  19.03.2026 அன்று சிவநாயனார் அவர்களால் தமிழ் முறைப்படி வேள்வி பூசை வழிபாடு நடைபெற்றது. 







































No comments:

Post a Comment

கோரக்கர் வழிபட்ட சிவலிங்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம். மங்கலம்பேட்டை கிராமத்தில்  முன்னொரு காலத்தில் ஒரு சிவலிங்கம் அவ்விடத்தில் வழிபாட்டில் இருந்துள்ளது. கோ...