திருச்சூர் வடக்கு நாதர் கோவில்
வணக்கம் இன்னிக்கு கேரளா மாநிலம், திருச்சூரில் பரசுராமரால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயிலாம் வடக்கு நாதர் கோவில் பற்றி முழுமையாக பார்ப்போம்.
ஒரு ரெண்டு நாள் லீவு கிடைத்தது train ticket போட்டு கிளம்பியாச்சு.
ரொம்பவும் புதுமையான அனுபவமாக இருந்தது. கோவில்களின் நாடு (God's own Country Kerala) என்று ஒரு Slogan சொல்கிறார்களே என்னதான் அப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு!. இன்று தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற 2 சிவாலயத்தில் அதனை உணர முடிந்தது.
த்திருசூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அம்சமான, அழகான கோவில்தான் வடக்கு நாதர் கோவில்.
கேரளாவுக்கு உரிய கட்டிடக் கலை அமைப்பில் இக்கோவில் இருக்கு. வடக்குண்ணநாதன் கோயிலின் தோற்றம் பற்றிய கதை பிரம்மந்த புராணத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது, இந்த வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது.
பரசுராமர் தன் சாபம் நீங்க வேண்டி 108 சிவாலயங்களை கட்டினார். அதில் முதல் முதல் சிவாலயம் இந்த வடக்குண்ணாதர் கோவில்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார். சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் வரவில்லை. நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.
மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, விளக்குகளின் வெப்பமோ இறைவனின் மேல் சாததப்பட்ட நெய்யை உருக்குவதில்லை.
அடுத்து கோவில் அமைப்பு மற்றும் வழிபடும் முறை பற்றி பார்ப்போம்.
திருக்கோயிலின் முகப்பில் உள்ள ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரத்தை 7 முறை பிரதட்சணம் செய்து திருக்கோயிலில் இடது புறமாக சென்றால் முதலில் பார்ப்பது வில்குழி தீர்த்தம்.
இந்த விழ்குழி தீர்த்தம் வரக் காரணம் பற்றி பார்ப்போம்.
அர்ச்சுனன் தவம்இருந்து பாசுபதம் பெற்ற பின் சிவ பெருமானைத் தரிசிக்க கயிலை சென்ற பொழுது சிவனைக் காணாமல், இந்த வடக்கு நாதர் கோவிலுக்கு வந்து சுற்றிவரும்போது பரசுராமர் கோவிலைக்கண்டு, ஷத்திரியன் ஆன தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணி, தன் அம்பை ஊன்றி வெளிப்பககமாகக் குதித்துவிட்டான்.
அவன் அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு சுனை உண்டாகி சுனை வில்குழி தீர்த்தம் எனப்படுகிறது. வில்குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும்..அடுத்து விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை 3 தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும்.
கோயிலின் அமைப்பு
எந்தக் கோயில் போனாலும் நாம் முதலில் போவது கணபதியிடம்தான். ஆனால் இந்தக் கோயிலில் அப்படி இல்லை. முதல் தரிசனம் நெய்யுடன் பளிங்கு போல் மின்னும் வடக்குநாதரைத்தான் செய்ய வேண்டும். அவரையும் பிரதட்சிணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்று சென்றுவிட்டு பின் திரும்பி வரவேண்டும். அதன் பின்தான் கணபதியின் தரிசனம். அதற்குப் பின் தரிசிக்க வேண்டியது கருணை பொழியும் பார்வதி அன்னையை தரிசிக்க வேண்டும்.
.
வடக்கு நாதர் அமர்ந்திருக்கும் கர்ப்பகிரஹம் வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கிழக்கு முகமாக பார்வதி தேவியின் சன்னிதானம் இருக்க, மேற்கு முகமாக வடக்கு நாதர் சன்னதி அமைந்திருக்கிறது. இங்கு மின்சார விளக்கு ஏற்றப்படாமல் பல எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தப் புனித ஒளியில் பரமேஸ்வரனை தரிசிக்கின்றோம்.
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல்,
பாறை போல் இறுகி உள்ளது.
எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
நெய் கட்டியாக உறைந்து வரும்.
கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
பூச்சிகள் மூலவரை தாக்காது.
மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
இங்கு இருக்கும் கோயில்களில் பிரசாதம் சந்தனம்தான். ஆஹா! என்ன மணம்! நாம் அதை நெற்றியில் தரிக்க, அந்த மணம் நம் கூடவே வந்து நம்மைச் சுற்றியும் பரவுகிறது. நுழையும் இடத்தில் துவார பாலகர்கள் இருவர் நிற்கின்றனர். மேலே கோபுரம் இல்லை. ஆனால், கேரள பாணியில் கூரை போல் செப்புத் தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
அதற்கு அடுத்த சன்னதி ஸ்ரீசங்கரநாராயணர், அடுத்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம். அங்கு ஒரு ராமர் சன்னதி இருக்கிறது.
சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது
பிரகாரத்தில் ஒரு பெரிய ஹால் இருக்க, அங்கு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த இடத்தைக் கூத்தம்பலம் என்கிறார்கள். இதில் சுமார் ஆயிரம் பேர் அமரலாம். நாட்டியம் ஆடும் முன் ஒரு ஆள் உயரத்திற்குக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விடிய விடிய அது எரிந்து கொண்டிருக்கும்.
சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.
ஆதிசங்கரர் தொடர்பு
இந்த இடம் ஆதிசங்கரருடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரரின் அன்னை திருமதி ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதியர் குழந்தைக்காக ஏங்கி, வடக்கு நாதரை வேண்டினாராம். வடக்கு நாதரும் அவள் கனவில் வந்து, "ஆயுள் குறைந்த நல்ல சற்புத்திரன் வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன் திறமை இல்லாத முட்டாளாக ஒரு புத்திரன் வேண்டுமா?" என்று கேட்க, அன்னையும் தனக்குப் புத்திசாலியான சற்புத்திரன்தான் வேண்டும் என்று மொழிய, அவரும் ‘அப்படியே நடக்கும்’ எனக் கூறி மறைந்து விட்டார். இந்தக் கோயிலின் வழிபாடு முழுவதையும் ஸ்ரீஆதிசங்கரரே முறைப்படுத்தி வைத்திருக்கிறார். ஆலயத்தில் சிம்மோதரனுக்கும், கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சங்கு, சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கான சமாதியும் இடம் பெற்றிருக்கிறது
ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வரும் போது சில மூலிகைகள் இந்தக் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம். ஆகையால் இங்கு வருபவர்கள் இந்த இடத்திலிருந்து சிறு புல்லையாவது பிடுங்கிக் கொண்டு போய் பத்திரப்படுத்துகின்றனர். இந்தக் கோயிலைத் ‘தென் கயிலாயம்’ என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி வேண்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது
பிரகாரத்தில் ஒரு பெரிய ஹால் இருக்க, அங்கு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த இடத்தைக் கூத்தம்பலம் என்கிறார்கள். இதில் சுமார் ஆயிரம் பேர் அமரலாம். நாட்டியம் ஆடும் முன் ஒரு ஆள் உயரத்திற்குக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விடிய விடிய அது எரிந்து கொண்டிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
மேற்குத் திசையில் கோபுரத்திற்கு அருகில் ஒரு சதுரமான கல் இருக்கிறது. அதை நான்கு பக்கம் மேடை கட்டிக் காத்து வருகிறார்கள். கோயில் தரிசனம் முடிந்த பின் பிரசாதத்தில் கொஞ்சத்தை இதில் எறிய வேண்டுமாம். இந்தக் கல்லின் பெயர் ‘கலிக்கல்’. இது வளர்ந்து கொண்டே வருகிறதாம். கலி முற்ற இந்தக் கல் கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். அதனால் அதன் மீது பிரசாதம் எரிந்து வளர விடாமல் செய்கிறார்களாம். இதைத் தவிர ஆதிசங்கரர் சமாதியான இடமும் அதற்கான ஆலயமும் இங்கு உள்ளது. இந்த இடத்தைச் ‘சங்கு சக்கரம்’ என்கிறார்கள்..
மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.
இரவு பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும். வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத சக்தி படைத்த ஆலயம் !
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், "யானையூட்டு விழா'வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யானைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்வார்கள்.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் தேதியன்று யானையூட்டு விழா நடந்து வருகிறது.
அதிகாலை 4 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி , யானைகள் பங்கேற்கும் கஜபூஜை நடைபெறும். கஜபூஜையுடன் , தெற்கு கோபுரவாசல் முன் யானைகள் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
சித்திரை முதல் நாள் விஷூக்கனி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அடுத்து கேரளாவில் இருக்கும் ஒரே ஒரு பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரிய திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் போகலாம்
No comments:
Post a Comment