குற்றுயிரும் கொலை உயிருமாய் சிதைந்த நிலையில் 2 சிவன் கோவில்களும் சிற்பங்களும் கல்வெட்டுகள் சொல்லும் கண்ணீர்க் கதை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, பேராம்பூர் அருகேயுள்ள மலம்பட்டி கிராமத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள முள் காட்டிற்குள் இரண்டு சிவாலயங்கள் சிதைந்த நிலையில் உள்ளது.
முதல் கோவிலில், 11, 12ம் நூற்றாண்டு காலத்து நந்தி, மார்பு பகுதிக்கு மேல் திருமால், கத்தியுடன் நிற்கும் வீரன் ஆகிய சிற்பங்களும் உள்ளது.
கோவில் சுவரில் உள்ள மன்னன் தேவியருடன் சேர்ந்து சிவலிங்க பூஜை செய்யும் சிற்பமும் உள்ளது.
அதன் அருகிலேயே வடகிழக்குப் பகுதியில், முற்றிலும் அழிந்து விட்ட மற்றொரு சிவன் கோவிலும் உள்ளது. ஆவுடையாருடன் கூடிய லிங்கமும், அருகிலேயே சண்டிகேஸ்வரர் சிற்பமும், முப்பட்டை துண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளன.
முழு விளக்கங்களும் வீடியோவில்
Youtube Video
Google Map Location
Ruined Siva Temple
JM7+R86, Pudukkottai, Tamil Nadu 622515
#Tamilkoviltrips
No comments:
Post a Comment