Sunday, May 7, 2023

முந்திரிக் காட்டிற்குள் ஒரு சிவலிங்கம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாவனம் எனும் கிராமத்தின் முந்திரிக்காட்டில் ஒரு சிவலிங்கம் ஆவுடையின் கீழ்ப்பாகத்துடனும், சண்டிகேஸ்வரருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நமது குழுவினருடன் 29.04.2023 அன்று நேரில் சென்றோம்.

விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்கை அடுத்த வலப்பக்க பிரிவின் வழியே சென்றால் சிலையுர் அடுத்து வாவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் முக்கிய பிரதான விவசாயம் முந்திரி சாகுபடி மட்டுமே. ஏதேனும் பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் 5 கிமி தொலைவில் உள்ள ஆண்டிமடம் தான் செல்லவேண்டும். இவ்வூரில் கவிதா என்பவரின் முந்திரித் தோட்டத்தில் 5தலைமுறையாக ஒரு சிவலிங்கமும், சண்டிகேஸ்வரர் புதைந்த நிலையிலும் இருந்துள்ளது. அவ்வப்போது மட்டுமே வழிபாடு செய்து வந்துள்ள்னர். கற்சிலைகள் வெயிலில் உள்ளதைப் பார்த்து சில மாதங்களுக்கு முன் மேற்கூரை அமைத்துள்ளனர். 

இவ்வூரின் அருகே கருக்கூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வனத்தறை அதிகாரி திரு.கலியமூர்த்தி அவர்கள் பிரதோசம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் வழிபாடு செய்து வந்துள்ளார். 

திருப்பணி செய்து தர வேண்டி வெங்கடேசன் என்ற அடியார் மூலம் தகவல் கிடைத்ததும் நேரில் சென்று பணியைத் துவங்கினோம். 

3 அடி உயரத்தில் இருந்த லிங்கபாணத்திற்கு பீடமும், ஆவுடை போன்ற அமைப்பை செங்கல் மூலமும் இரவு 12 மணிக்கு கட்டி முடித்தோம். 

அன்றாடம் வழிபாடு நடைபெறாவிட்டாலும் அவ்வப்போது பிரதோச வழிபாடாகிலும் நடைபெற வேண்டும் என எண்ணி நமது கோவை அரன் பணி அறக்கட்டளையின் திருமதி சந்திரா அவர்களைத் தொடர்பு கொண்டு உடனே ஒன்னேமுக்கால் அடியில் ஒரு நந்தியம்பெருமான தேவை என்றதும் திரு. கணேசன் ஐயா அவர்கள் மூலம் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு காலை 8 மணிக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு துவங்கியது.


வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மருதாடு எனும் கிராமத்தில் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் 25.03.2023 அன்று கரூர் தரகம்பட்டி சிவ நாயனார் மற்றும் அவரின் மனையியார் திருமதி செந்தமிழ்செல்வி, கரூர் சுப்பிரமணி , வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி சென்னை ஜீவா, மணி உள்ளிட்டோருடன் அடியேனும் பயணம் செய்தோம்.

ஊரின் ஒதுக்குப்புறமாக இவ்விடம் இருந்து வந்துள்ளது. பஞ்சமி நிலத்தின் வகையில் இது வருவதால் இவ்விடத்தில் ஊர்ப்பொதுமக்கள் கூடி கோவில் எழுப்புவதோ தொடர்ச்சியாக வழிபாடு செய்வதோ இயலாததாகிப் போய்விட்டது. இதன் கிழக்கே 200 அடி தூரத்தில் உள்ள  ஆலமரத்தின் அடியில் உள்ள முனீசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர். தற்போது மேல்மருவத்தூரில் இருந்து வந்நவாசி செல்ல 4 வழிச்சாலை அமைத்திடும் பணி துவங்கிடவே மருதாடு ஊருக்குள் சாலை செல்லாமல் ஊரின் ஒதுக்குப்புறமான இவ்விடத்தில் முனீசுவரர் கோவிலுக்கும் இந்த சிவலிங்கம் உள்ள வேப்பமரத்தின் இடையிலும் சென்றது. இந்தாள் வரை சிவலிங்கத்தை எடுக்க ஒப்புதல் வழங்காதவரின் நிலத்தில் சாலை அமைவதால் எடுத்து வைப்பதற்கான தடை நீங்கியது. இந்த நிலையில் நமது குழுவினருக்கு இத்தகவல் கிடைக்கவே விரைந்தோம். ஊர்முக்கிஸ்தர்களிடம் அனுமதியை சுப்பிரமணி ஐயா வாங்கியிருந்தார். ஊர்ப்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மருதாடு மருதீஸ்வரரை எடுத்து வைக்கத் தாயாரானோம். 

JCB வண்டியை வரவழைத்து சுற்றிலும் உள்ள முட்புதர்களையும் செடிகளையும் அகற்றினோம். சிவநாயனார் ஐயா, சுப்பிரமணி ஐயா, மருதாடு சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தேவராப்பதிகங்கள் பாடி எழுந்தருள் செய்ய விண்ணப்பம் வைத்தனர். இதன் பின் கடப்பாறை மற்றும் மண்வெட்டி கொண்டு தோண்ட ஆரம்பித்தனர். வேப்பமரத்தின் வேர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்ததால் JCB வண்டியைக் கொண்டு பறிக்கும் பணி ஆரம்பித்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தது இந்த சிவலிங்கம் . 

கூடுதல் விளக்கங்களை கீழ்க்காணும் யூடியுப் வீடியோவில் தெரிவித்துள்ளேன். 




 
கோவில் பொறுப்பாளர்கள்
ஆனைக்குட்டி - 9787128618
சங்கர் - 6381514652

Google Map Location 


நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 












































கரூரில் தவ்வையுடன் சிவலிங்கம் கண்டுபிடிப்பு

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், சின்ன தாதம் பாளையம் கிராமத்தில் 13.11.2022 அன்று வாய்க்கால் கரையில் பல ஆண்டுகளாக முள்ளுக்குள் இருந்தும், நந்தியை சாராய பாட்டில்களின் மத்தியில் இருந்தும் மீட்டெடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஊர்மக்கள் சிவலிங்கத்தை எடுக்கவோ, வைக்கவோ முழு ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தை ஆரம்பித்து மாலை 5 மணிக்கே எடுக்க அனுமதி கிடைத்தது.
 
8 ஆம் நூற்றாண்டு தவ்வை சிற்பத்துடன் கூடிய சிவலிங்கம், நந்திக்கு முதல் அபிசேகம் செய்து வழிப்பட்டை இறைவன் திருவருளால் துவங்கி வைத்தோம். 














ஒவ்வொரு நாளும் இந்த சிவலிங்கத்தை யும் நந்தியும் ஊர் மக்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள 16 கிராமங்களும் கொண்டாடியதுதான் வியப்பு. 



















தரையில் இருந்தவர், மண் மேட்டிற்கு வந்தார், ஓலைக் குடிசைக்கு வந்தார், இரும்பு ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு வந்தார், மின்விளக்கு உபயம், தரைதளம் உபயம், விளக்கு உபயம், ஆவுடை உபயம் என்று மிக மிக வளர்ந்தது.

 இன்று (01.01.2023 ஞாயிறு) 48 மண்டல பூஜையில் 1008 சங்காபிஷேகம் செய்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கி சின்ன தாதம்பாளையம் மக்கள் கொண்டாடினர். 




விரைவில் கற்கோவிலாகக் கட்ட திட்டமிட்டுள்ளனர். 

Ancient 5½Feet Sivalingam Annamalaiyar Temple

ஊர்ப்பொதுமக்களுக்கும், அடியார்பெரு மக்களுக்கும் நன்றிகள். 

நன்றி...

கோவில் பொறுப்பாளர் திரு. ரத்தினம் 9791888202

தொடர்ந்து பயணிப்போம்...
சிவாலயங்களை நோக்கி...

சிவசங்கர்
திண்டுக்கல்
9976913310 - WhatsApp

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...